செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

சின்னசேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-06-28 10:06 GMT   |   Update On 2020-06-28 10:06 GMT
சின்னசேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ரவி(வயது 37). இவர் சின்னசேலம் பஸ் நிலையத்தில் உள்ள பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் கடையில் வேலை பார்த்தபோது, அருகில் சென்ற மின் ஒயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் ரவி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News