செய்திகள்
செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ். மஸ்தான்

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

Published On 2020-06-28 08:47 GMT   |   Update On 2020-06-28 08:47 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ். மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விழுப்புரம்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 44,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செஞ்சி தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News