செய்திகள்
தற்கொலை

வாடிப்பட்டி அருகே கணவன்-மனைவி தற்கொலை

Published On 2020-06-27 12:37 GMT   |   Update On 2020-06-27 12:37 GMT
வாடிப்பட்டி அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சமயநல்லூர் வைகை ரோட்டில் வசித்து வந்தவர் மச்சக்காளை(வயது 67). ஓய்வுபெற்ற பஞ்சாலை தொழிலாளி. இவரது மனைவி பசுபதி(60). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் 3-வது மகன் வீட்டின் மேல் மாடியில் மச்சக்காளையும், பசுபதியும் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை மாடியில் இவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு நீண்டநேரம் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்களது மகன் மாடிக்கு சென்று கதவை தட்டிப்பார்த்தார். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இதைதொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தாயாரும், தந்தையும் தனித்தனியாக தூக்கில் தொங்கினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கணவன்-மனைவி 2 பேரும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் வேறு ஏதெனும் காரணம் இருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News