செய்திகள்
சாளுவனாற்றை தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அதிகாரிகள்

விவசாயிகள் போராட்டம் எதிரொலி- சாளுவனாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்

Published On 2020-06-27 10:34 GMT   |   Update On 2020-06-27 10:34 GMT
விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக சாளுவனாற்றில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சாளுவனாற்றை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கஜா புயலின்போது சாளுவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தென்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாளுவனாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சாளுவனாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

இதேபோல் சாளுவனாற்றை தூர்வார வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் எதிரொலியாக சாளுவனாற்றை தூர்வார அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதன்படி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாளுவனாற்றில் அக்கரை கோட்டகம் முதல் வங்கநகர் வரை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் சோலைராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News