செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை - கோப்புப்படம்

போலீஸ்துறையில் கொரோனா பாதிப்பு 900 ஆக உயர்வு - புதிதாக 30 பேருக்கு தொற்று

Published On 2020-06-23 12:02 GMT   |   Update On 2020-06-23 12:02 GMT
சென்னை போலீஸ்துறையில் புதிதாக மேலும் 30 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 900 ஆக உயர்ந்தது.
சென்னை:

சென்னை போலீஸ்துறையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 870 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதிதாக மேலும் 30 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்றைய பாதிப்பில் ஒரு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம் பெற்றார். இதையடுத்து சென்னை போலீஸ்துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 900 ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து நேற்று 10 போலீசார் பணிக்கு திரும்பினார்கள். இதுவரையில் 350 போலீசார் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு பட்டியலில் தினமும் போலீஸ்காரர் சிக்குவதால் அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News