செய்திகள்
வாலிபர் தற்கொலை

மரக்காணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-06-22 11:22 GMT   |   Update On 2020-06-22 11:22 GMT
மரக்காணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன் (வயது 24). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் அஞ்சலை அங்கு வந்து வேலைக்குப் போகாமல் ஏன் இப்படி விளையாடிக் கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பரதன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரதன் பூச்சி மருந்தையும் சாப்பிட்டுள்ளார். அதனால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News