செய்திகள்
கைது

மேட்டூர் அருகே சூதாடிய 9 பேர் கைது

Published On 2020-06-21 11:28 GMT   |   Update On 2020-06-21 11:28 GMT
மேட்டூர் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:

மேட்டூர் தூக்கணாம்பட்டி காவிரி ஆற்றின் கரையில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக மேட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சவுந்திரம் (வயது 26) உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களும், ரூ.21 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News