செய்திகள்
கைது

தோகைமலை அருகே மது விற்ற வாலிபர் கைது

Published On 2020-06-21 09:17 GMT   |   Update On 2020-06-21 09:17 GMT
தோகைமலை அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

தோகைமலை அருகே உள்ள பள்ளிப்பட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 32) என்பவர் தனது பெட்டி கடையில் வைத்து மது விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News