செய்திகள்
கரூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனியில் வசித்தவர் லோகநாதன் (வயது 49). தொழிலாளி. இவரது மனைவி விஜயா (37). கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த லோகநாதன், கடந்த 16-ந்தேதி மதுபோதையில் வீட்டில் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.