செய்திகள்
வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2020-06-17 09:34 GMT   |   Update On 2020-06-17 09:34 GMT
கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட என்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 30). இவர், தனது வீட்டிலேயே செல்போன் பழுது நீக்கும் கடை வைத்து உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர், அப்பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கமேடு போலீசில் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த திட்டசாலை செல்வநகரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News