செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஊரடங்கை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு- நாளை மறுநாள் விசாரணை

Published On 2020-06-15 07:42 GMT   |   Update On 2020-06-15 07:42 GMT
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகளை அரசு அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை ரத்து செய்யக்கோரி இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது. 
Tags:    

Similar News