செய்திகள்
கடைகளுக்கு சீல்

அதிராம்பட்டினத்தில் 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 24 கடைகளுக்கு சீல்

Published On 2020-06-13 14:48 GMT   |   Update On 2020-06-13 14:48 GMT
அதிராம்பட்டினத்தில் 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 24 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் கடைகளுக்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற இடங்களை காட்டிலும் அதிராம்பட்டினத்தில் கடை வாடகை அதிக தொகைக்கு ஏலம் போனது. கடைகளை பலர் உள்வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த நிலையில் கடைகளை ஏலத்தில் எடுத்த நபர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு வாடகை தொகையை செலுத்தவில்லை.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் பலமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் வாடகை பாக்கியை அவர்கள் செலுத்தாமல் இருந்து வந்தனர். இதையடுத்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் உத்தரவின்படி பேரூராட்சி செயல் அதிகாரி பழனிவேல் தலைமையில் பேரூராட்சி அதிகாரிகள் நேற்று பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 24 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.

இதையொட்டி அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி அதிகாரிகள் ஒரேநேரத்தில் 24 கடைகளுக்கு ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News