செய்திகள்
விபத்து காயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி படுகாயம்

Published On 2020-06-13 10:34 GMT   |   Update On 2020-06-13 10:34 GMT
வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள பாகாநத்தம் புதூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மகாலட்சுமியுடன் (38) திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடமதுரை தென்னம்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அவர்கள் கடந்தபோது, அந்த வழியே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் மணப்பாறை கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முகமது சித்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News