செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
காவேரிப்பட்டணம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி வித்யா (26). இவர்களுக்கு நரேஷ்குமார் (6) என்ற மகனும், கனிஷ்கா (3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற வித்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. குமரேசன், மனைவி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை.
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி வித்யா (26). இவர்களுக்கு நரேஷ்குமார் (6) என்ற மகனும், கனிஷ்கா (3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற வித்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. குமரேசன், மனைவி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை.
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.