செய்திகள்
தேனி சிறையில் அடைக்கப்பட்ட மதுரை கைதிக்கு கொரோனா
தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை கைதிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 25 வயது நபர் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த 7-ந்தேதி கைது செய்தனர். மதுரை சிறையில் இடவசதி இல்லாததால் இவரை தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
அவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை கொரோனா பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தேனி மாவட்ட சிறையில் அவருடன் தங்கியிருந்த சக கைதிகள் மற்றும் அவரை அழைத்து வந்த போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் அவருடன் தங்கிஇருந்த கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 25 வயது நபர் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த 7-ந்தேதி கைது செய்தனர். மதுரை சிறையில் இடவசதி இல்லாததால் இவரை தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
அவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை கொரோனா பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தேனி மாவட்ட சிறையில் அவருடன் தங்கியிருந்த சக கைதிகள் மற்றும் அவரை அழைத்து வந்த போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் அவருடன் தங்கிஇருந்த கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.