செய்திகள்
பெட்ரோல் டீசல்

மதுரையில் பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு

Published On 2020-06-09 13:54 GMT   |   Update On 2020-06-09 13:54 GMT
மதுரையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.60 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.29 காசாகவும் உள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மதுரை:

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.

கொரோனா ஊரடங்கின் போது கச்சா எண்ணெய் விலை சரிந்தது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது. இன்று 3-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

மதுரையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.60 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.29 காசாகவும் உள்ளது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Tags:    

Similar News