செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-06-07 10:15 GMT   |   Update On 2020-06-07 10:15 GMT
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆம்பூர்:

ஆம்பூர் அருகே சின்னவரிகம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42), கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் கழிப்பறைக்காக கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டும் பணியை செய்தார்.

சிறிது ஓய்வுக்காக அருகில் இருந்த பாழடைந்த வீட்டருகே சென்ற போது அங்கிருந்த மின்சார கம்பி இவர் உடல் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News