செய்திகள்
கைது

சின்னசேலம் அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2020-06-06 07:54 GMT   |   Update On 2020-06-06 07:54 GMT
சின்னசேலம் அருகே செம்மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம்:

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விளக்கப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 27). இவர் ஒரு லாரியில் 6 யூனிட் செம்மண் அரசின் அனுமதி இல்லாமல் ஏற்றிகொண்டு சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராம எல்லையில் நிறுத்தி இருந்தார்.

அப்போது பணியில் இருந்த தொட்டியம் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் லாரியை சோதனை செய்துபார்த்த போது அதில் 6 யூனிட் செம்மண் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதுபற்றி சின்னசேலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் பிரபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News