செய்திகள்
தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே முதியவர் தற்கொலை

Published On 2020-06-05 12:32 GMT   |   Update On 2020-06-05 12:32 GMT
காவேரிப்பட்டணம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தை அடுத்த மோரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் கடந்த ஒரு ஆண்டாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வலி தாங்க முடியாத முதியவர், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News