செய்திகள்
கொரோனா வைரஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிப்பு 254 ஆக உயர்வு

Published On 2020-06-04 06:51 GMT   |   Update On 2020-06-04 06:51 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254-ஆக உயர்ந்துள்ளது.
ரிஷிவந்தியம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த 51 வயது முதியவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை சுகாதார துறையினர் போலீஸ்பாதுகாப்புடன் எடுத்து சென்று விழுப்புரம் மின் தகன மயானத்தில் நேற்றிறவு எரியூட்டினர். சங்கராபுரம் பகுதியில் கொரோனா வைரசுக்கு இதுவே முதல் பலி என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News