செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.17 ஆயிரம் அபராதம்

Published On 2020-06-03 12:54 GMT   |   Update On 2020-06-03 12:54 GMT
பாபநாசம் பேரூராட்சியில் 15 கடைகளிலிருந்து 150 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாபநாசம்:

பாபநாசம் பேரூராட்சியில் செயல் அலுவலர் கார்த்திக்கேயன் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15 கடைகளிலிருந்து 150 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் வணிகர்களுக்கு ரூ. 17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் 12 பேருக்கு ரூ. 1200 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆய்வில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, சுகாதார மேற்பார்வையாளர்கள் நாடிமுத்து, நித்தியானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News