செய்திகள்
கொள்ளை

பழனியில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய ஆட்டோ டிரைவர்

Published On 2020-06-03 12:45 GMT   |   Update On 2020-06-03 12:45 GMT
பழனியில் செல்போன் கடையில் திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பழனி:

பழனி டவுன் பழைய தாராபுரம் சாலையில் ஒரு செல்போன் கடை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடை அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வு செய்யப்பட்டதால் மீண்டும் கடை திறக்கப்பட்டது. கடைக்கு ஒரு வாலிபர் செல்போன் வாங்குவதுபோல வந்தார். கடை ஊழியர்களிடம் பேசிக்கொண்டே ஷோரூம்பில் வைக்கப்பட்டிருந்த செல்போன்களை திருடி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

அதன்பிறகு கடை ஊழியர் இருப்பை சரிபார்த்தபோது செல்போன் திருடு போனது தெரிய வந்தது.

கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை வைத்து பார்த்தபோது அந்த வாலிபர் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த காட்சிகள் அடிப்படையில் பழனி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் செல்போன்களை திருடியவர் அமரப்பூண்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என தெரிய வந்தது. அதன்பேரில் அந்த வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் இதேபோல வேறு கடைகளில் அந்த வாலிபர் கைவரிசை காட்டி உள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News