செய்திகள்
திமுக சார்பில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
லெக்ணாப்பட்டி ஊராட்சியில் 650 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கீரனூர்:
லெக்ணாப்பட்டி ஊராட்சியில் 650 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கி, குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை குன்னண்டார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் கே.ஆர்.என்.போஸ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் தாயினிப்பட்டி கண்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குளத்தூர் ஆறுமுகம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.