செய்திகள்
விபத்து பலி

போடியில் சரக்கு வேன் கவிழ்ந்து விவசாயி பலி

Published On 2020-05-29 10:14 GMT   |   Update On 2020-05-29 10:14 GMT
போடியில் சரக்கு வேன் கவிழ்ந்ததில் விவசாயி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அரண்மனை தெருவை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன் (வயது44). விவசாயி. இவர் தனது தோட்டத்துக்கு தேவையான பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சென்றார்.

நேற்று போடியில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வேன் பள்ளத்தில் சிக்கியது. இதனை மீட்க வேன் டிரைவர் மற்றும் ராஜ பாண்டியன் ஆகியோர் முயற்சித்தனர்.

வேனை பள்ளத்தில் இருந்து மீட்க முயன்றபோது திடீரென சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராஜபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News