செய்திகள்
கடைக்கு சீல்

திண்டிவனத்தில் 6 பழக்கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

Published On 2020-05-29 08:22 GMT   |   Update On 2020-05-29 08:22 GMT
திண்டிவனத்தில் தடையை மீறி கடை திறந்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம்:

திண்டிவனம் பகுதி நேரு வீதியில் காய்கறி கடைகள் மற்றும் பழகடைகள் வைப்பதற்கு சப்- கலெக்டர் அனு உத்தரவின் பேரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை மீறி கடைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நகராட்சி அதிகாரிகள் நகர அமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நகரமைப்பு ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்றர். அங்கு தடையை மீறி வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகரிகள் சீல் வைத்தனர்.

Tags:    

Similar News