செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-05-27 11:57 GMT   |   Update On 2020-05-27 11:57 GMT
திருவண்ணாமலை கிழக்கு மற்றும் சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிழக்கு மற்றும் சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பருவகால ஆய்வு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தச்சம்பட்டு, பெரியகல்லபாடி, சு.பாப்பம்பாடி, காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, வெறையூர், திருவானைமுகம், தண்டரை, அப்புப்பட்டு, சு.நல்லூர், சு.வாளவெட்டி, மங்கலம், கொத்தந்தவாடி, எரும்பூண்டி, கானலப்பாடி, பூதமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் ஆனந்தல், மன்னம்பாடி, கலர்பாளையம், கொட்டாவூர், அம்பேத்கர் நகர், மேக்களூர், கத்தாம்பட்டு, வழுதலங்குணம், சோமாசிபாடி, சோபுதூர், சோ நம்மியந்தல், அரியாங்குப்பம், கழிகுளம், ஐங்குணம், ஏர்ப்பாக்கம், கொளத்தூர், பொன்னாங்குளம், கீரனூர், சூரியந்தாங்கல், ராஜாபாளையம், வேளானந்தல், ஜமீன் அகரம், நாரையூர், பன்னியூர், நீர்மலா நகர், செம்மாம்பாடி, இந்திரவனம், அரியபாடி, செப்படாங்குளம், நாராயணமங்கலம், சாத்தமங்கலம், மரக்கோணம், சிங்கம்பூண்டி, கீழ்வெள்ளியூர் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை, சேத்துப்பட்டு மின்வாரிய செயற் பொறியாளர்கள் ராஜசேகரன், ரவிசந்திரபாபு ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News