செய்திகள்
கைது

பச்சைமலையில் வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது

Published On 2020-05-27 09:50 GMT   |   Update On 2020-05-27 09:50 GMT
பச்சைமலையில் வனவிலங்குகளை வேட்டையாடியவரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை வனப் பகுதிகளில் முயல், பன்றிகள் வேட்டையாட படுவதாக வனச்சரக அலுவலர் பொன்னுசாமிக்கு தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் வன அலுவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். சோபனபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது வயல் வெளிகளில் வலையுடன் ஒருவர் நடமாடுவதறிந்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் வைரிசெட்டிப்பாளையம் காமாட்சியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் என்பதும் அவர் வனப்பகுதிகளிலும் அடர்ந்த புதர்களிலும் வலையை விரித்து, முயல்களை வேட்டையாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News