செய்திகள்
நகை பறிப்பு

செங்குன்றம் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2020-05-27 07:04 GMT   |   Update On 2020-05-27 07:04 GMT
செங்குன்றம் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம்:

புழல், காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் மாரி செல்வம். இவரது மனைவி செல்வி. நேற்றுமாலை செல்வி மட்டும் கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் குளிர் பானம் வாங்குவது போல் நடித்து செல்வி அணிந்து இருந்த 14 பவுன் செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

Tags:    

Similar News