செய்திகள்
திருப்பூர் மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர் மின்வாரிய அதிகாரி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னங்குறிச்சி:
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 35). இவருடைய மனைவி அப்சரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சாகுல் அமீது திருப்பூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சாகுல் அமீது நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின்வாரிய அதிகாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரம்ஜான் பண்டிகை அன்று, மனைவியுடன் குடும்ப தகராறு காரணமாக மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 35). இவருடைய மனைவி அப்சரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சாகுல் அமீது திருப்பூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சாகுல் அமீது நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின்வாரிய அதிகாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரம்ஜான் பண்டிகை அன்று, மனைவியுடன் குடும்ப தகராறு காரணமாக மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.