செய்திகள்
கோப்பு படம்

கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி

Published On 2020-05-26 05:29 GMT   |   Update On 2020-05-26 05:29 GMT
திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியை அடுத்த சந்தனகுடிலை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 38). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (38). இருவரும் பழனி ரோட்டில் செயல்பட்டு வரும் மர அறுவை மில்களில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு, வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். பாலுச்சாமி கிணற்றில் இறங்கி குளித்தார். சக்திவேலுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் சக்திவேல் தவறி விழுந்தார். நீரில் மூழ்கிய அவரை காப்பாற்ற பாலுச்சாமி முயன்றதாக தெரிகிறது. அதில் அவருடன் சேர்ந்து பாலுச்சாமியும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News