செய்திகள்
கோவில்பட்டியில் சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
கோவில்பட்டியில் சூறைக்காற்றில் 500 வாழைகள் சரிந்து சேதம் அடைந்தன.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று முன்தினம் மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கோவில்பட்டி லட்சுமிபுரத்தில் சுப்பையா (வயது 65) என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 வாழைகள் சரிந்து சேதம் அடைந்தன.
இதேபோன்று அப்பகுதியில் ராஜாராம் (42) என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த புடலங்காய், சுரைக்காய், பாகற்காய் கொடிகள் பந்தலுடன் சரிந்தது. எனவே சூறைக்காற்றில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.