செய்திகள்
தற்கொலை

மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-05-25 09:23 GMT   |   Update On 2020-05-25 09:23 GMT
மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் அருகே ராசிபாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் ரகு (வயது 27) கோவையில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் திருமணம் செய்து வைக்க தாமதமானதால் மனமுடைந்த ரகு கடந்த 19-ந் தேதி விஷம் குடித்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தபோது, வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News