செய்திகள்
மரணம்

போடி அருகே கூலித்தொழிலாளி மர்ம மரணம்

Published On 2020-05-24 09:45 GMT   |   Update On 2020-05-24 09:45 GMT
போடி அருகே மர்மமான முறையில் இறந்த கூலித்தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது65). கூலித்தொழிலாளி. முருகனுக்கு குடி பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் போடி சன்னாசிபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போடி டவுன் போலீசார் விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News