செய்திகள்
கோஷ்டி மோதல்

வாட்டாத்திகோட்டை அருகே கோஷ்டி மோதலில் 2 பேர் காயம்

Published On 2020-05-24 09:25 GMT   |   Update On 2020-05-24 09:25 GMT
வாட்டாத்திகோட்டை அருகே கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

வாட்டாத்திகோட்டை காவல் சரகம் திப்பன் விடுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர் சென்னிய விடுதி பகுதியில் டீ கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு திப்பன் விடுதியை சேர்ந்த சந்துரு (53) சென்றுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றி கோவிந்ராஜ், சந்துரு தரப்பினர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது கோஷ்டி மோதலாக மாறியது. இந்த தாக்குதலில் கோவிந்தராஜ், சந்துரு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திகோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பாப்பாநாடு காவல் நிலையம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் நாகவள்ளி உத்தரவின் பேரில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News