செய்திகள்
கும்பகோணத்தில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கும்பகோணம் நகராட்சி பகுதியில் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வலையப்பேட்டை நீரேற்று நிலையத்தில் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக நகரத்தில் உள்ள 45 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 26-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்தி நகராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.