செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்வு

Published On 2020-05-22 08:56 GMT   |   Update On 2020-05-22 08:56 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கொரோ தொற்றால் ஏற்கனவே 76 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 66 பேர் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து திரும்பிய பட்டுகோட்டை அடுத்த பாதரங்கோட்டை கிராமத்தை சேர்ந்த 48 வயது நபர், கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், மாலத்தீவில் இருந்து ஒரத்தநாட்டுக்கு வந்த 31 வயது வாலிபர், சென்னையில் இருந்து திரும்பிய குழிமாத்துரை சேர்ந்த 27 வயது நபர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News