செய்திகள்
குடிநீர்

திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து

Published On 2020-05-20 14:31 GMT   |   Update On 2020-05-20 14:31 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
திருவாரூர்:

வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கும்பகோணம் ஒன்றியம் குடமுருட்டி ஆறு குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள குழாய், பாபநாசம் ஒன்றியம் பட்டவர்த்தியில் உள்ள குடிநீர் குழாய், மற்றும் திருக்கிளார் குழாய் தாங்கும் பாலத்தின் மீது செல்லும் குழாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே 22-ந்தேதி, 23-ந் தேதி ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாரூர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News