செய்திகள்
விபத்து பலி

போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி

Published On 2020-05-20 12:02 GMT   |   Update On 2020-05-20 12:02 GMT
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள போயர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 25). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் எலுமிச்சம்பள்ளி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சத்யமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News