செய்திகள்
கொரோனா வைரஸ்

வெண்ணந்தூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

Published On 2020-05-20 11:24 GMT   |   Update On 2020-05-20 11:24 GMT
வெண்ணந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை அருகே கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை அருகே கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை, வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தொடங்கி வைத்து சாலையில் வரும் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

விழிப்புணர்வில் கொரோனாவை தடுக்க முக கவசம் அணிய வேண்டும் எனவும், சுத்தமாக கை, கால்களை கழுவி பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின்போது ஒருவர் கொரோனா வைரஸ் போன்று வேடமணிந்து வந்திருந்தார்.
Tags:    

Similar News