செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தியவர் கைது

Published On 2020-05-20 09:07 GMT   |   Update On 2020-05-20 09:07 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் வெங்கத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் மணல் கடத்தியதாக கீழ்நல்லாத்தூரை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News