செய்திகள்
ராமநாதபுரம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் முனீஸ்வரன்(வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜெயஸ்ரீ(33) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ தீராத வயிற்று வலி மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தாராம். நேற்று வயிற்று வலியை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.