செய்திகள்
12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
12 மாவட்டங்களில் தளர்வுகள் எதும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் பெரும்பலூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.