செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உறுப்பினர் அல்லாத சலூன் கடைக்காரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2020-05-16 06:47 GMT   |   Update On 2020-05-16 06:47 GMT
நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முடி திருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஏற்கனவே இரு தவணைகளாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

முடி திருத்துவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தந்தது போல் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 
Tags:    

Similar News