செய்திகள்
அமைச்சர் எஸ்பி வேலுமணி

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி- அமைச்சர் வேலுமணி

Published On 2020-05-15 07:03 GMT   |   Update On 2020-05-15 07:03 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் 15 மண்டலங்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. இருப்பினும் மக்கள் நலனுக்காக மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களில் 34 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், நோய் தடுப்பு பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 34 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News