செய்திகள்
தேனி அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கிய கும்பல்
தேனி அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டம் டொம்புசேரி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரும் பாண்டீஸ்வரி (20) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை, அவரது மனைவி நதியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வீட்டை காலி செய்யுமாறு அடிக்கடி மிரட்டி வந்ததுடன் ஜாதியை சொல்லி திட்டி வந்தனர். சம்பவத்தன்று செல்லத்துரை உள்பட அவரது குடும்பத்தினர் பாண்டீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் ராஜா கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ், சிங்கம், வல்லரசு, பிச்சைமணி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் டொம்புசேரி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரும் பாண்டீஸ்வரி (20) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை, அவரது மனைவி நதியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வீட்டை காலி செய்யுமாறு அடிக்கடி மிரட்டி வந்ததுடன் ஜாதியை சொல்லி திட்டி வந்தனர். சம்பவத்தன்று செல்லத்துரை உள்பட அவரது குடும்பத்தினர் பாண்டீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் ராஜா கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ், சிங்கம், வல்லரசு, பிச்சைமணி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.