செய்திகள்
தற்கொலை

கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2020-04-29 07:01 GMT   |   Update On 2020-04-29 07:01 GMT
கோவையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை புளியகுளம் அருகே உள்ள ஏரி மேட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சங்கீதா (வயது15). இவர் மீனா எஸ்டேட் பகுதியிலுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சங்கீதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கில் தொங்கினார். இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய சங்கீதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சங்கீதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News