செய்திகள்
தற்கொலை

குடும்பம் நடத்த மனைவி வராததால் வாலிபர் தற்கொலை

Published On 2020-04-24 14:33 GMT   |   Update On 2020-04-24 14:33 GMT
நாகர்கோவிலில் குடும்பம் நடத்த மனைவி வராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பறக்கின்கால் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 33). இவருடைய மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் அருள் தனிமையில் வசித்து வந்தார்.

மேலும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்து பார்த்தார். ஆனால் வர முடியாது என அவர் மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அருள், கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் வைத்து தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அருளை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News