செய்திகள்
தற்கொலை

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ்காரர் தற்கொலை

Published On 2020-04-24 07:48 GMT   |   Update On 2020-04-24 07:48 GMT
மதுரை ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் விஜயகுமார் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.

விஜயகுமார் நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவு அலுவலகத்தில் பணியில் இருந்தார்.

அப்போது நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News