search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை தற்கொலை"

    • உடல்நலக்குறைவால் மனவேதனையில் இருந்த மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்ட கணவனும் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் செங்கப்படை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது60).

    இவர் கே.வெள்ளாகுளம் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பாண்டியம்மாள் (50). இவர்களுக்கு வெங்கடசாமி என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

    நாராயணமூர்த்தியும், பாண்டியம்மாளும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றனர். இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கவில்லை.

    சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன்-மனைவி இருவரும் இறந்து கிடந்தனர். அவர்களது உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகன், திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் இருவரின் உடலை ஆய்வு செய்தபோது இருவரும் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாண்டியம்மாள் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை.

    இதனால் மன வேதனையில் இருந்து வந்தததால் தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்து இறந்தார். மனைவி விஷம் குடித்து இறந்ததைக் கண்டு நாராயணமூர்த்தியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடல்நலக்குறைவால் மனவேதனையில் இருந்த மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்ட கணவனும் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் செங்கப்படை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×