search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army soldier suicide"

    சோழவந்தான் அருகே விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). ராணுவ வீரரான இவர் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    முனியாண்டி திடீரென்று இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. முனியாண்டியின் மரணம் குறித்து வடகாடு பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனியாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    சந்தவாசல் அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் உரி என்ற இடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 35 நாள் விடுமுறையில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அவரது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமாருக்கும், அவரது மனைவி அமுதாமைவிற்கும் (29) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அமுதாமை அவரது தாய் வீடான ஆதனூருக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் குமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குமார் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள வேப்ப மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை அந்த வழியாக மாடு மேய்க்க சென்ற பாஸ்கரன் என்பவர் குமார் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த குமாருக்கு திலகவதி (9), ஹரிணி (7) என 2 மகள்கள் உள்ளனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விடுதி அறையில் தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 28). ராணுவ வீரர். ஜம்முவில் பணியாற்றி வரும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் சுந்தர மூர்த்தி காசநோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே வேலையை விட்டு வந்துவிடலாமா? என யோசித்துள்ளார்.

    சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், குடும்பத்தினருடன் பேசியுள்ளார். இந்த நிலையில் மதுரை டவுன்ஹால் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து சுந்தரமூர்த்தி தங்கினார்.

    மறுநாள் காலையில் அவரது அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப் படவில்லை. இது தொடர்பாக திடீர் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது சுந்தரமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது தெரிய வில்லை. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீ முஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்ட மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28) ராணுவ வீரர்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்தார்.

    வீட்டுக்கு வந்த அவர் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது தமிழரசன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து காட்டு மன்னார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தமிழரசனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ராணுவ வீரர் தமிழரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×